மடி இன்மை(Matiyinmai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #601 #602 #603 #604 #605 #606 #607 #608 #609 #610
குறள் #601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

பொருள்
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

Tamil Transliteration
601 Kutiyennum Kundraa Vilakkam Matiyennum
Maasoora Maaindhu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

பொருள்
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Tamil Transliteration
Matiyai Matiyaa Ozhukal Kutiyaik
Kutiyaaka Ventu Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

பொருள்
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

Tamil Transliteration
Matimatik Kontozhukum Pedhai Pirandha
Kutimatiyum Thanninum Mundhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

பொருள்
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

Tamil Transliteration
Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

Tamil Transliteration
Netuneer Maravi Matidhuyil Naankum
Ketuneeraar Kaamak Kalan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

பொருள்
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

Tamil Transliteration
Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar
Maanpayan Eydhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

பொருள்
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

Tamil Transliteration
Itipurindhu Ellunj Chol Ketpar Matipurindhu
Maanta Ugnatri Lavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

பொருள்
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

Tamil Transliteration
Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku
Atimai Pukuththi Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

பொருள்
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

Tamil Transliteration
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan
Matiyaanmai Maatrak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

பொருள்
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

Tamil Transliteration
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu.

மேலதிக விளக்கங்கள்
🡱