ஊக்கம் உடைமை(Ookkamutaimai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #591 #592 #593 #594 #595 #596 #597 #598 #599 #600
குறள் #591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

பொருள்
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

Tamil Transliteration
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பொருள்
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

Tamil Transliteration
Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

Tamil Transliteration
Aakkam Izhandhemendru Allaavaar Ookkam
Oruvandham Kaiththutai Yaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

பொருள்
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

Tamil Transliteration
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

பொருள்
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

Tamil Transliteration
Vellath Thanaiya Malarneettam Maandhardham
Ullath Thanaiyadhu Uyarvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள்
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.

Tamil Transliteration
Ulluva Thellaam Uyarvullal Matradhu
Thallinun Thallaamai Neerththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

பொருள்
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

Tamil Transliteration
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir
Pattuppaa Toondrung Kaliru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

பொருள்
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

Tamil Transliteration
Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu
Valliyam Ennunj Cherukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.

Tamil Transliteration
Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai
Veruum Pulidhaak Kurin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

பொருள்
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

Tamil Transliteration
Uramoruvarku Ulla Verukkaiaq Thillaar
Marammakka Laadhale Veru.

மேலதிக விளக்கங்கள்
🡱