வலியறிதல்(Valiyaridhal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #471 #472 #473 #474 #475 #476 #477 #478 #479 #480
குறள் #471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

Tamil Transliteration
Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum
Thunaivaliyum Thookkich Cheyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

பொருள்
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

Tamil Transliteration
Olva Tharivadhu Arindhadhan Kandhangich
Chelvaarkkuch Chellaadhadhu Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

பொருள்
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

Tamil Transliteration
Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki
Itaikkan Murindhaar Palar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

பொருள்
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

Tamil Transliteration
Amaindhaang Kozhukaan Alavariyaan Thannai
Viyandhaan Viraindhu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

பொருள்
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

Tamil Transliteration
Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

பொருள்
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

Tamil Transliteration
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin
Uyirkkirudhi Aaki Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

பொருள்
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

Tamil Transliteration
Aatrin Aravarindhu Eeka Adhuporul
Potri Vazhangu Neri.

மேலதிக விளக்கங்கள்
குறள் #478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

பொருள்
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

Tamil Transliteration
Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருள்
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

Tamil Transliteration
Alavara?ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola
Illaakith Thondraak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

பொருள்
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.

Tamil Transliteration
Ulavarai Thookkaadha Oppura Vaanmai
Valavarai Vallaik Ketum.

மேலதிக விளக்கங்கள்
🡱