செங்கோன்மை(Sengonmai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #541 #542 #543 #544 #545 #546 #547 #548 #549 #550
குறள் #541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

Tamil Transliteration
Orndhukan Notaadhu Iraipurindhu Yaarmaattum
Therndhusey Vaqdhe Murai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

Tamil Transliteration
Vaanokki Vaazhum Ulakellaam Mannavan
Kol Nokki Vaazhung Kuti.

மேலதிக விளக்கங்கள்
குறள் #543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பொருள்
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

Tamil Transliteration
Andhanar Noorkum Araththirkum Aadhiyaai
Nindradhu Mannavan Kol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

Tamil Transliteration
Kutidhazheeik Kolochchum Maanila Mannan
Atidhazheei Nirkum Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

Tamil Transliteration
Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

Tamil Transliteration
Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

Tamil Transliteration
Iraikaakkum Vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach Cheyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

Tamil Transliteration
Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan
Thanpadhaththaan Thaane Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

பொருள்
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

Tamil Transliteration
Kutipurang Kaaththompik Kutram Katidhal
Vatuvandru Vendhan Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

பொருள்
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

Tamil Transliteration
Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh
Kalaikat Tadhanotu Ner.

மேலதிக விளக்கங்கள்
🡱