கொடுங்கோன்மை(Kotungonmai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #551 #552 #553 #554 #555 #556 #557 #558 #559 #560
குறள் #551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

பொருள்
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

Tamil Transliteration
Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu
Allavai Seydhozhukum Vendhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

பொருள்
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

Tamil Transliteration
Velotu Nindraan Ituven Radhupolum
Kolotu Nindraan Iravu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

பொருள்
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

Tamil Transliteration
Naatorum Naati Muraiseyyaa Mannavan
Naatorum Naatu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

பொருள்
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

Tamil Transliteration
Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich
Choozhaadhu Seyyum Arasu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

பொருள்
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

Tamil Transliteration
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

பொருள்
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

Tamil Transliteration
Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel
Mannaavaam Mannark Koli.

மேலதிக விளக்கங்கள்
குறள் #557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

பொருள்
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

Tamil Transliteration
Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

பொருள்
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

Tamil Transliteration
Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa
Mannavan Korkeezhp Patin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

பொருள்
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

Tamil Transliteration
Muraikoti Mannavan Seyyin Uraikoti
Ollaadhu Vaanam Peyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

பொருள்
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.

Tamil Transliteration
Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar
Kaavalan Kaavaan Enin.

மேலதிக விளக்கங்கள்
🡱