ஊழ்(Oozh)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #371 #372 #373 #374 #375 #376 #377 #378 #379 #380
குறள் #371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

பொருள்
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.

Tamil Transliteration
Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul
Pokoozhaal Thondrum Mati.

மேலதிக விளக்கங்கள்
குறள் #372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

பொருள்
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

Tamil Transliteration
Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum
Aakaloozh Utrak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

பொருள்
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

Tamil Transliteration
Nunniya Noolpala Karpinum Matrundhan
Unmai Yarive Mikum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

பொருள்
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

Tamil Transliteration
Iruveru Ulakaththu Iyarkai Thiruveru
Thelliya Raadhalum Veru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

Tamil Transliteration
Nallavai Ellaaan Theeyavaam Theeyavum
Nallavaam Selvam Seyarku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

பொருள்
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

Tamil Transliteration
Pariyinum Aakaavaam Paalalla Uyththuch
Choriyinum Pokaa Thama.

மேலதிக விளக்கங்கள்
குறள் #377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

பொருள்
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

Tamil Transliteration
Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti
Thokuththaarkku Thuyththal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

பொருள்
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

Tamil Transliteration
Thurappaarman Thuppura Villaar Urarpaala
Oottaa Kazhiyu Menin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

பொருள்
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?.

Tamil Transliteration
Nandraangaal Nallavaak Kaanpavar Andraangaal
Allar Patuva Thevan?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

பொருள்
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?.

Tamil Transliteration
Oozhir Peruvali Yaavula Matrondru
Soozhinun Thaanmun Thurum.

மேலதிக விளக்கங்கள்
🡱