கல்வி(Kalvi)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #391 #392 #393 #394 #395 #396 #397 #398 #399 #400
குறள் #391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பொருள்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

Tamil Transliteration
Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka.

மேலதிக விளக்கங்கள்
குறள் #392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

பொருள்
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

Tamil Transliteration
Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

பொருள்
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

Tamil Transliteration
Uvappath Thalaikkooti Ullap Piridhal
Anaiththe Pulavar Thozhil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

பொருள்
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar
Kataiyare Kallaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

பொருள்
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

Tamil Transliteration
Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk
Katranaith Thoorum Arivu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

பொருள்
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.

Tamil Transliteration
Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan
Saandhunaiyung Kallaadha Vaaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

Tamil Transliteration
Orumaikkan Thaan Katra Kalvi Oruvarku
Ezhumaiyum Emaap Putaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

Tamil Transliteration
399 Thaamin Puruvadhu Ulakin Purak Kantu
Kaamuruvar Katrarin Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

Tamil Transliteration
Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku
Maatalla Matrai Yavai.

மேலதிக விளக்கங்கள்
🡱