செய்ந்நன்றியறிதல்(Seynnandri Aridhal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #101 #102 #103 #104 #105 #106 #107 #108 #109 #110
குறள் #101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்
``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

Tamil Transliteration
Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பொருள்
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

Tamil Transliteration
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

பொருள்
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

Tamil Transliteration
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

Tamil Transliteration
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொருள்
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

Tamil Transliteration
Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

பொருள்
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

Tamil Transliteration
Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

பொருள்
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

Tamil Transliteration
Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

Tamil Transliteration
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள்
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

Tamil Transliteration
Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

Tamil Transliteration
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku.

மேலதிக விளக்கங்கள்
🡱