தவம்(Thavam)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #261 #262 #263 #264 #265 #266 #267 #268 #269 #270
குறள் #261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

பொருள்
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்.

Tamil Transliteration
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai
Atre Thavaththir Kuru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

பொருள்
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

Tamil Transliteration
Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai
Aqdhilaar Merkol Vadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

பொருள்
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.

Tamil Transliteration
Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol
Matrai Yavarkal Thavam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

பொருள்
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.

Tamil Transliteration
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

பொருள்
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.

Tamil Transliteration
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

பொருள்
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.

Tamil Transliteration
Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar Rallaar
Avanjeyvaar Aasaiyut Pattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

பொருள்
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.

Tamil Transliteration
Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch
Utachchuta Norkir Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

பொருள்
``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

Tamil Transliteration
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

பொருள்
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

Tamil Transliteration
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul.

மேலதிக விளக்கங்கள்
குறள் #270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

பொருள்
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.

Tamil Transliteration
Ilarpala Raakiya Kaaranam Norpaar
Silarpalar Nolaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
🡱