நல்குரவு(Nalkuravu)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

பொருள்
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

Tamil Transliteration
Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

பொருள்
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.

Tamil Transliteration
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

பொருள்
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

Tamil Transliteration
Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka
Nalkuravu Ennum Nasai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

பொருள்
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

Tamil Transliteration
Irpirandhaar Kanneyum Inmai Ilivandha
Sorpirakkum Sorvu Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

பொருள்
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.

Tamil Transliteration
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith
Thunpangal Sendru Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

பொருள்
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

Tamil Transliteration
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

பொருள்
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

Tamil Transliteration
Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum
Piranpola Nokkap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

பொருள்
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

Tamil Transliteration
Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

பொருள்
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

Tamil Transliteration
Neruppinul Thunjalum Aakum Nirappinul
Yaadhondrum Kanpaatu Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

பொருள்
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

Tamil Transliteration
Thuppura Villaar Thuvarath Thuravaamai
Uppirkum Kaatikkum Kootru.

மேலதிக விளக்கங்கள்
🡱