கேள்வி(Kelvi)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #411 #412 #413 #414 #415 #416 #417 #418 #419 #420
குறள் #411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

பொருள்
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

Tamil Transliteration
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #412
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

பொருள்
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

Tamil Transliteration
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

பொருள்
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

Tamil Transliteration
Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin
Aandraaro Toppar Nilaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

Tamil Transliteration
Katrila Naayinung Ketka Aqdhoruvarku
Orkaththin Ootraan Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

பொருள்
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

Tamil Transliteration
Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre
Ozhukka Mutaiyaarvaaich Chol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

Tamil Transliteration
Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum
Aandra Perumai Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

பொருள்
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

Tamil Transliteration
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa Rizhaiththunarn
Theentiya Kelvi Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

பொருள்
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

Tamil Transliteration
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

பொருள்
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

Tamil Transliteration
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

பொருள்
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

Tamil Transliteration
Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal
Aviyinum Vaazhinum En?.

மேலதிக விளக்கங்கள்
🡱