நிலையாமை(Nilaiyaamai)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #331 #332 #333 #334 #335 #336 #337 #338 #339 #340
குறள் #331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

பொருள்
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

Tamil Transliteration
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum
Pullari Vaanmai Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

பொருள்
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

Tamil Transliteration
Kooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam
Pokkum Adhuvilin Thatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

பொருள்
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

Tamil Transliteration
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

பொருள்
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

Tamil Transliteration
Naalena Ondrupor Kaatti Uyir Eerum
Vaaladhu Unarvaarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

பொருள்
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.

Tamil Transliteration
Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai
Mersendru Seyyap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்.

Tamil Transliteration
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

பொருள்
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

Tamil Transliteration
Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa
Kotiyum Alla Pala.

மேலதிக விளக்கங்கள்
குறள் #338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

பொருள்
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.

Tamil Transliteration
Kutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre
Utampotu Uyiritai Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

பொருள்
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

Tamil Transliteration
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi
Vizhippadhu Polum Pirappu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

பொருள்
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

Tamil Transliteration
Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
🡱