இரவச்சம்(Iravachcham)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

பொருள்
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.

Tamil Transliteration
Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum
Iravaamai Koti Urum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

பொருள்
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

Tamil Transliteration
Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu
Ketuka Ulakiyatri Yaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

பொருள்
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.

Tamil Transliteration
Inmai Itumpai Irandhudheer Vaamennum
Vanmaiyin Vanpaatta Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

பொருள்
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.

Tamil Transliteration
Itamellaam Kollaath Thakaiththe Itamillaak
Kaalum Iravollaach Chaalpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

Tamil Transliteration
Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu
Unnalin Oonginiya Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

பொருள்
தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

Tamil Transliteration
Aavirku Neerendru Irappinum Naavirku
Iravin Ilivandha Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

பொருள்
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

Tamil Transliteration
Irappan Irappaarai Ellaam Irappin
Karappaar Iravanmin Endru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

பொருள்
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.

Tamil Transliteration
Iravennum Emaappil Thoni Karavennum
Paardhaakkap Pakku Vitum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

Tamil Transliteration
Iravulla Ullam Urukum Karavulla
Ulladhooum Indrik Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

பொருள்
இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.

Tamil Transliteration
Karappavarkku Yaangolikkum Kollo Irappavar
Sollaatap Poom Uyir.

மேலதிக விளக்கங்கள்
🡱