தனிப்படர் மிகுதி(Thanippatarmikudhi)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

பொருள்
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

Tamil Transliteration
Thaamveezhvaar Thamveezhap Petravar Petraare
Kaamaththuk Kaazhil Kani.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

பொருள்
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.

Tamil Transliteration
Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku
Veezhvaar Ala? Kkum Ali.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

பொருள்
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.

Tamil Transliteration
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

பொருள்
விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

Tamil Transliteration
Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar
Veezhap Pataaar Enin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

பொருள்
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?.

Tamil Transliteration
Naamkaadhal Kontaar Namakkevan Seypavo
Thaamkaadhal Kollaak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

பொருள்
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

Tamil Transliteration
Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

பொருள்
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.

Tamil Transliteration
Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman
Oruvarkan Nindrozhuku Vaan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.

Tamil Transliteration
Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

பொருள்
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

Tamil Transliteration
Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

பொருள்
நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.

Tamil Transliteration
Uraaarkku Urunoi Uraippaai Katalaich
Cheraaaai Vaazhiya Nenju.

மேலதிக விளக்கங்கள்
🡱