குறிப்பறிவுறுத்தல்(Kuripparivuruththal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

பொருள்
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

Tamil Transliteration
Karappinung Kaiyikan Thollaanin Unkan
Uraikkal Uruvadhon Runtu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

பொருள்
கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

Tamil Transliteration
Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup
Penniraindha Neermai Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

பொருள்
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

Tamil Transliteration
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

பொருள்
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

Tamil Transliteration
Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai
Nakaimokkul Ulladhon Runtu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

பொருள்
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

Tamil Transliteration
Seridhoti Seydhirandha Kallam Urudhuyar
Theerkkum Marundhondru Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

பொருள்
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

Tamil Transliteration
Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri
Anpinmai Soozhva Thutaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

பொருள்
குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!.

Tamil Transliteration
Thannan Thuraivan Thanandhamai Namminum
Munnam Unarndha Valai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

பொருள்
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

Tamil Transliteration
Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum
Ezhunaalem Meni Pasandhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பொருள்
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

Tamil Transliteration
Thotinokki Mendholum Nokki Atinokki
Aqdhaan Tavalsey Thadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

பொருள்
காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

Tamil Transliteration
Penninaal Penmai Utaiththenpa Kanninaal
Kaamanoi Solli Iravu.

மேலதிக விளக்கங்கள்
🡱