உறுப்புநலன் அழிதல்(Uruppunalanazhidhal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

பொருள்
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

Tamil Transliteration
Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli
Narumalar Naanina Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

பொருள்
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

Tamil Transliteration
Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

பொருள்
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

Tamil Transliteration
Thanandhamai Saala Arivippa Polum
Manandhanaal Veengiya Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

பொருள்
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

Tamil Transliteration
Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

பொருள்
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

Tamil Transliteration
Kotiyaar Kotumai Uraikkum Thotiyotu
Tholkavin Vaatiya Thol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

பொருள்
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

Tamil Transliteration
Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

பொருள்
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?.

Tamil Transliteration
Paatu Perudhiyo Nenje Kotiyaarkken
Vaatudhot Poosal Uraiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

பொருள்
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.

Tamil Transliteration
Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu
Paindhotip Pedhai Nudhal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

பொருள்
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

Tamil Transliteration
Muyakkitaith Thanvali Pozhap Pasapputra
Pedhai Perumazhaik Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

பொருள்
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.

Tamil Transliteration
Kannin Pasappo Paruvaral Eydhindre
Onnudhal Seydhadhu Kantu.

மேலதிக விளக்கங்கள்
🡱