நாணுத் துறவுரைத்தல்(Naanuththuravuraiththal)

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

பொருள்
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

Tamil Transliteration
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

பொருள்
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

Tamil Transliteration
Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

பொருள்
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

Tamil Transliteration
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

பொருள்
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.

Tamil Transliteration
Kaamak Katumpunal Uykkum Naanotu
Nallaanmai Ennum Punai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

பொருள்
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.

Tamil Transliteration
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

பொருள்
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Tamil Transliteration
Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

பொருள்
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

Tamil Transliteration
Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

பொருள்
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.

Tamil Transliteration
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

பொருள்
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.

Tamil Transliteration
Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

பொருள்
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

Tamil Transliteration
Yaamkannin Kaana Nakupa Arivillaar
Yaampatta Thaampataa Aaru.

மேலதிக விளக்கங்கள்
🡱